Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கிளிநொச்சியில், அண்மையில், யானைத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்ஷி, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு, நேற்று மாலை மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான கொழும்பு - களனி பகுதியைச் சேர்ந்த இவர் (வயது-32), ஞாயிற்றுக்கிழமை (19) இரவு, பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள விஹாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு, விடுதிக்குத் திரும்பிய போதே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானார்.
அதில் படுகாயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விரிவுரையாளர் திங்கட்கிழமை (20) உயிரிழந்துவிட்டார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
3 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
26 Aug 2025