Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், தென்மராட்சி, கைதடிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம், இன்று (19) அதிகாலை 4 மணியளவில், இடம்பெற்றுள்ளது.
சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுவொன்று, குறித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், கூரிய ஆயுதங்களால் வீட்டில் உள்ளவர்களைத் தாக்கியுமுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவரும், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை நடத்தியவர்கள், முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்ததாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
9 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago