2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விசுவமடு கொலையின் தடையங்கள் கிடைக்கவில்லை

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் இராணுவ முகாமில் கடமையாற்றிய நபரின் உடலை கண்டபிடிப்பதற்கான அகழ்வு பணிகள் மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பிக்கப்பட்டு தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு விசுவமடு இராணுவ முகாமில் கடமையாற்றிய நபரொருவரை, இராணுவ அதிகாரி ஒருவர்  கொலை செய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்த அகழ்வு பணிகள் இடம்பெற்றது.

கொலைச்சம்பவத்தை நேரில் கண்ட நபரின் வாக்குமூலத்தையடுத்து இந்த அகழ்வு பணிகள் இடம்பெற்றது.
கடந்த மாதம் 9ஆம் திகதி விசுவமடு பாடசாலைக்கு பின்புறமாகவிருந்த காணி ஒன்றில், இந்த அகழ்வு பணி

இடம்பெற்றபோதும் எந்தவொரு தடயப்பொருட்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் அகழ்வு பணிகள் இடம்பெற்ற போதும் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X