2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மல்லாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் நேற்று திங்கட்கிழமை (02) முச்சக்கரவண்டியொன்றும் கன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குப்பிளான் தெற்கைச் சேர்ந்த கந்தசாமி ரங்கசாமி (வயது 32) என்பவரே படுகாயமடைந்துள்ளார். 

இந்த விபத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, கன்ரர் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .