2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கரவெட்டி மேற்கு பகுதியில் ஒருவரை வாளாள் வெட்டி காயப்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஐவரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

கடந்த 14ஆம் திகதி கரவெட்டி மேற்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, வாள் வெட்டில் முடிவடைந்தது. இச்சம்பவத்தில் செல்வராசா செல்வம் என்ற நபர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேக நபர் கடந்த 15ஆம் திகதி நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நால்வரையும் பொலிஸார் வியாழக்கிழமை (17) கைது செய்திருந்தனர்;.

இந்நிலையில் குறித்த ஐவரையும் வெள்ளிக்கிழமை (18) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .