2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

21 இந்திய மீனவர்களின் மறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், வெவ்வேறு தினங்களில் கைதான இந்திய மீனவர்கள் 21பேரை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று உத்தரவிட்டார்.

இம்மாதம் 2ஆம் திகதி கைதான 5 இந்திய மீனவர்கள் மற்றும் கடந்த மாதம் வெவ்வேறு தினங்களில் கைதான 16 இந்திய மீனவர்களதுமே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் உள்ளடங்கியிருந்த 15 வயது சிறுவனை, அச்சுவேலியில் அமைந்துள்ள சான்றுபெற்ற பாடசாலையில் தொடர்ந்தும் தங்க வைக்குமாறும், நீதவான் பணிப்புரை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X