2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முதலாமிடம்

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வௌியாகியுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, கணிதம், விஞ்ஞானம், கலைப் பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (அம் மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்), துவாரகா பகிரதன் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, விஞ்ஞான பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராஸா 3 ஏ சித்திகளை பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவின் ஆங்கில பிரிவில் தேவகி பிரபுராஜ் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் கலைப் பிரிவில் ஆரவி தசஅவதாரசர்மா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேவேளை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் ரங்கநாதன் ஜதுகுலன் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாமிடத்தினையும் கணித பிரிவில் செல்வதேவன் கனிசியன் 2ஏ 1பி சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X