2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

15 கிலோகிராம் ஆமை மீட்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

வல்வெட்டித்துறைக் கடலில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த சுமார் 15 கிலோகிராம் நிறையுடைய ஆமையை இன்று புதன்கிழமை (04) காப்பாற்றிக்; கடலில் விட்டுள்ளதாக  வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்து இறைச்சியாக்க முற்பட்டுள்ளனர். அவ்விடத்துக்கு பொலிஸார் சென்றதையடுத்து, மீனவர்கள் ஆமையை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .