2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றத்தில் மீன் ஏல விற்பனை

Niroshini   / 2016 ஜூன் 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று வியாழக்கிழமை (16) தீர்ப்பளித்தார்.

அத்துடன், இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 384 கிலோகிராம் மீன்கள், நீதவானின் உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஏல விற்;பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் பெறப்பட்டது.

குருநகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 நாட்டு படகுகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி வேலணை கடற்பரப்பில் புதன்கிழமை (15) இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களிடமிருந்து மீன்கள் மற்றும் 3 தொகுதி தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்கள் நல்ல நிலையில் இருந்தமையால், நீதிவானின் முன்னிலையில் வைத்து மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், தங்கூசி வலைகளை அழிப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X