2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 656பேர் கைது

Menaka Mookandi   / 2013 ஜூன் 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா. நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 656 பேரில் 30 பேருக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்; மிகுதி பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாகவும், யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம் ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அந்த வகையில், யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மதுபோதையில் கலகம் விளைவித்தவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், வாகனங்களை பரிசோதித்த போது அவை உரிய முறையில் இல்லாமை, மற்றும் வாகனங்களை உரிய ஆவணங்கள் இன்றி செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் 656 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில், யாழ் பொலிஸ் பிரிவில், மது விற்பனை செய்த 3 பேரும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த 10 பேரும், வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 79 பேரும் வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 29 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் மற்றும் பொது இடத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் இருவரும், போக்குவரத்து விதி முறைகளை மீறிய 10 பேரும், வாகன பரிசோதனையில் 33 பேரும், வாகனங்களின் உரிய முறையில் இல்லாமை 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் குடிபோதையில் கலகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 4 பேரும், சந்தேகத்தின் பேரில் ஒருவரும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த இருவரும், வாகனங்களின் ஆவணங்கள் இல்லாதவர்கள் 24 பேரும், வாகனங்களின்;  உரிய முறையில் இல்லாமை 37 பேரும் கைதாகியுள்ளனர்.
 
கோப்பாய் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக 12 வழக்குகளும், வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 96 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 64 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 32 பேரும், வாகனங்கள்  உரிய முறையில் இல்லாமை 18, சாவகச்சேரி வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 29 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 26 பேரும் கைதாகினர்.

வட்டுக் கோட்டையில் வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 45 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 38 பேரும், போக்குவரத்து விதிமுறைகளை மிறிய 10 பேருமாக 656 கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .