2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 203 பேர் கைது

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 203 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ்  வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரம் யாழ்.நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41 பேரும், அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 18 பேரும், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 17 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், திருடிய குற்றச்சாட்டில் 6 பேரும், வீதி விபத்துக் காரணமாக ஒருவரும், சட்டவிரோத மது விற்பனை குற்றச்சாட்டில் 14 பேரும், பொது இடத்தில் மது அருந்தியவர் ஒருவரும், சூழல் மாசடைதலில் ஈடுபட்ட 4 பேரும், பாரிய குற்றங்களைப் புரிந்த 2 பேரும், மோசடியில் ஈடுபட்ட 2 பேரும், பாலியல் குற்றச்சாட்டு ஒருவரும்,  பொதுமக்களிற்கு நட்டம் ஏற்படுத்திய ஒருவரும், கத்தியால் குத்த முயற்சித்த ஒருவரும், களவாடிய பொருட்களை தன்வசம் வைத்திருந்த ஒருவரும், வீடு உடைக்கும் கருவியை தன்வசம் வைத்திருந்தவர்கள் 2 பேரும், அனுமதியின்றி மாடுகளை எற்றிச் சென்ற 2 பேரும், போலி தங்க நகைகள் வைத்திருந்த 11 பேரும், துப்பாக்கி வைத்திருந்த 2 பேரும், சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்கள் 2, இந்திய மீனவர்களின் வள்ளம் உடைத்தவர்கள் 2, திருட்டு மின்சாரம் பெற்ற 3 பேரும், ஏனைய குற்றங்களுக்காக 54 பேருமாக மொத்தம் 203 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, யாழில் கடந்த வாரம் 20 லட்சம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழில் கடந்த வாரத்தில் இரண்டு காசோலை மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் வியாபார நோக்கத்திற்காக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், மற்றொருவரிடமும் அதே காரணத்திற்காக 3 லட்சத்து 44 ஆயிரம் ரூபாவும் மோசடி செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசடிகளைச் செய்தவர்கள் தலைமறைவாகியுள்ளதால், இது தொடர்பாக யாழ். நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், புலனாய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .