2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 26 பேர் கைது

Super User   / 2014 ஜனவரி 21 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். காங்கேசன்துறை கடற் பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர்.

இந்திய புதுக்கோட்டை மாவட்டம் ஜனதாப்பட்டினம் பகுதியிலிருந்து ஆறு படகுகளில் வந்த 26 மீனவர்கள் காங்கேசன்துறை கடற் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .