2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 30 பேருக்கும் விளக்கமறியல்

Super User   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை கடற் பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவிட்டார் என யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

மேற்படி மீனவர்களை ஊர்காவற்றுறை பதில் நீதிபதி வாசஸ்தலத்தில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இராமேஸ்வரம், இராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளிலிருந்து 08 படகுகளில் வந்த 30 மீனவர்கள் யாழ். தீவுப் பகுதிக்கு அண்மித்த கடற் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று இரவு காங்கேசன்துறை கடற் படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .