2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சீரற்ற காலநிலை: 6 இந்திய மீனவர்கள் மீட்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்தியக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்பரப்புகளில் கரையொதுங்கியுள்ளனர்.

இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலைக்காரணமாக இவர்களது படகுகள் இவ்வாறு இலங்கை கடற்பரப்புகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வல்வெட்டித்துறைக் கரையில் மூவரும், பருத்தித்துறை கடற்கரையில் மூவருமே இவ்வாறு நேற்று இரவு கரையொதுங்கியுள்ளனர்.

இவர்கள் சிறியரக நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சீரற்ற காலநிலையில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை முடிந்தவுடன் இவர்;களைத் திரும்பவும் அவர்களின் படகுகளில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .