Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 26 , மு.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் யுத்தம் முடிவடைந்ததாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பின்னர் 10 வங்கிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண நிதித்துறை சேவை நிலையம் இன்று அறிவித்துள்ளது.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடமாகாணம் நிதித்துறையில் பாரிய முன்னேற்றத்தை கண்டு வருகிறது. மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வங்கிகள் தமது புதிய கிளைகளையும் விரிவாக்கல் நிலையங்களையும் வடக்கில் அமைத்து வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் தற்போது 16 வங்கிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் மூலம் 24 கிளைகளும் 20 விரிவாக்கல் நிலையங்களும் செயலாற்றுவதாக வடமாகாண நிதித்துறை சேவை நிலையம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 May 2025