2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டு சிறை

Janu   / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு கருவூல பரிசுப் பொருட்கள் ஊழல் தொடர்பான  வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா  17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்​கப்​பட்டுள்​ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்​ரான் கான் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். அப்​போது சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்​மான், இம்​ரான் கானுக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்​கடிகாரத்தை பரி​சாக வழங்​கி​னார். பிரிட்டனின் கிராஃப் நிறுவனம் தயாரித்த குறித்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.

பாகிஸ்தான் சட்ட விதி​களின்​படி பிரதமர், அதிபர் வெளிநாட்டு பயணங்களின்​போது பெறும் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் (தோஷ​கா​னா) ஒப்படைக்க வேண்டும். ஆனால் கைக்​கடிகாரத்தை இம்​ரான்​கான் கருவூலத்தில் ஒப்படைக்காமல் மனைவி புஷ்ரா பீபி​யிடம் அளித்தார். அவர், அந்த கைக்​கடிகாரத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

கைக்​கடிகாரத்தை வாங்க விரும்பிய நிறுவனம், அதன் மதிப்பு குறித்து கிராஃப் நிறுவனத்திடம் விசா​ரித்​த போது சவுதி இளவரசருக்காக இரு சிறப்பு கைக்​கடி​காரங்​களை மட்​டுமே தயாரித்த கிராஃப் நிறு​வனம், அதில் ஒரு கைக்கடிகாரம் விற்பனைக்கு வருவது குறித்து சவுதி அரேபிய அரசுக்கு தகவல் தெரி​வித்​துள்ளது.

இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு தரப்பில் பாகிஸ்தான் பிரதமர் அலு​வல​கத்​தில் தகவல் கோரப்​பட்​ட ​போது ​ விலை உயர்ந்த கைக்​கடிகாரத்தை இம்​ரான் கான் அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மனைவியிடம் அளித்​திருப்​பது தெரிய​வந்​தது.

அரசு கருவூல பரிசுப் பொருட்கள் ஊழல் தொடர்பான வழக்கை இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்​த போது  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்​ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்​கப்​பட்டுள்​ளது. மேலும் இருவருக்கு தலா ரூ.1.64 கோடி அபராதமும் விதிக்​கப்​பட்​டுள்ளது. 

பாகிஸ்​தானின் ராவல்​பிண்​டி​யில் உள்ள அடி​யாலா சிறையில் இம்​ரான் கானும் புஷ்ரா பீபி​யும் அடைக்​கப்​பட்டுள்​ளனர். அந்த சிறைக்கு நேரில் சென்ற நீதிபதி ஷாரூக் அங்கேயே தீர்ப்பு வழங்கி​உள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X