2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவர்களுக்கு 14 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஜனவரி 15 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

யாழ். கைதடியிலுள்ள வறிய மாணவர்களில் 14 பேருக்கு டென்மார்க் நாட்டிலுள்ள கைதடி மக்களின் 2 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் 14 துவிச்சக்கர வண்டிகள் பொங்கல் தினத்தன்று வழங்கப்பட்டன. 

யாழ். கைதடி மக்கள் நலன்பேணும் நட்புறவு கழகத்தின் தலைவர் இ.கந்தசாமி தலைமையில் கைதடி தெற்கு சனசமூக நிலைய கலை அரங்கத்தில்நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உலக உணவுத்திட்டத்தின் ஓய்வு நிலை அதிகாரி க.சச்சிதானந்தம் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக பண்டாரவளை கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான ஜெ.சிற்சபாநாதன், திருமதி ஜானகி இராசேந்திரம், யாழ். நகர் துசா மூக்குகண்ணாடி வியாபார நிலைய உரிமையாளர் து.மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் ஓய்வு நிலை அதிகாரி க.சச்சிதானந்தன் உரையாற்றுகையில்,

"எமது மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்று நல்ல நோக்கத்துடன் வழங்கும் இந்த உதவிகளை மாணவர்கள் சரிவரப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், கல்வியில் சிறப்பான பெறுபேறுகளை அடைவது தான் இந்த உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களின் நல்ல நோக்கத்திற்கு செய்யும் கைமாறாகும்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் தரும் ஆதரவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன், சமூகத்தில் வளப்பற்றாக்குறையுள்ள பல விடயங்களுக்கு இந்த நிதி பெரும் துணை புரிகின்றது" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .