2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: 14 வயது சிறுவனை தேடி வலைவீச்சு

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாடசாலை, மாணவிகள் மூவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக்  கூறப்படும்  14 வயது மாணவன் ஒருவனை தேடி சிலாபம் பொலிஸார் வலைவிரித்துள்ளனர். 

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராய்ச்சிக்கட்டு பிரதேச பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவிகள் மூவரே குறித்த மாணவனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

10 வயதுடைய மேற்படி  சிறுமிகள் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் விளையாடுவதற்காக ஒன்று சேரும் சந்தர்ப்பங்களில் அவ்விடத்திற்கு வரும் குறித்த மாணவன் அச்சிறுமிகளை ஒவ்வொருவராக ஏமாற்றி அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த பல மாதங்களாக அவ்வப்போது இவ்வாறு தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக அச்சிறுமிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது மேற்படி சிறுமிகள் வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .