2025 ஜூன் 25, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 18 பேர் நெடுந்தீவில் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நெடுந்தீவு கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 18 பேர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம், பாம்பன் பகுதியிலிருந்து 03 நாட்டுப் படகுகளுடன் வந்த இந்திய மீனவர்கள் 18 பேரையே கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும்  நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.

இந்த நிலையில், மேற்படி மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவும் 06 படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .