2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில், சிறுகுற்றம் புரிந்த 190 பேர் கைது: டி.ஐ.ஜி

Kanagaraj   / 2013 மார்ச் 22 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 190 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதில், யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 38 பேரும் அடங்குகின்றனர்.

அத்துடன், குடிபோதையில் கலகம் விளைவித்த 12பேரும் , மதுபோதையில் வாகனம் செலுத்திய , ஆபாச படம் வைத்திருந்தவர்களில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி சட்டவிரோதமான சாராயம் வைத்திருந்த இருவரும் கஞ்சா வைத்திருந்த  குற்றச்சாட்டில் இருவரும்  சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 23 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சூழலை மாசடையும் வகையில் வைந்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 09 பேரும்  அடிகாயத்தை  ஏற்படுத்திய ஒருவரும் வீதி விபத்துகள் தொடர்பில்  02 பேரும் திருட்டு மின்சாரம் பெற்ற 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது இடத்தில் கலகம் விளைவித்தவர்கள் 13 போரும் கொள்ளை மற்றும் போலி ஆவணம் வைத்திருந்த   குற்றச்சாட்டுக்களில் தலா ஒருவரும்  ஏனைய குற்றங்களுக்காக 74 பேருமாக மொத்தம் 190 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .