2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 05 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 30 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து படகு ஒன்றில் வந்த 6 மீனவர்களும், புதுக்கோட்டை ஜனதாப் பட்டினம் பகுதியிலிருந்து 6 படகுகளில் வந்த 24 மீனவர்களுமே இவ்வாறு திங்கட்கிழமை (4) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்கள், காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதினைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .