2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆவா குழுவினருக்கு 31வரை விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா கும்பலை எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவும் அவர்களது தலைவரும் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆவா குழுவினரை பிணையில் விடும்படி யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் பலர் நீதிமன்றில் ஆஜராகி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி ஆட்சேபனை தெரிவித்ததினைத் தொடர்ந்து வழக்கினை பதில் நீதவான் பிற்பகலிற்கு ஒத்திவைத்தார்.

தொடர்ந்து மீண்டும் பிற்பகலில் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதில் நீதவான், ஆவா கும்பலை எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதுவரையிலும் அந்தக் குழுவினைச் சேர்ந்த 13பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவுடன் தொடர்புபட்ட இன்னும் பலரைத் விசேட பொலிஸ் குழுவொன்று தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • sivarajah Saturday, 18 January 2014 07:44 AM

    முதலில் இவர்களுக்காக வாதாடும் சட்டதரணிகளை அழிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .