2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்கள் 31 பேர் விடுவிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 31 பேரை  அவர்களின் 02 படகுகளுடன் வியாழக்கிழமை (06) அதிகாலை காங்கேசன்துறை கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடற்படையினர் ஒப்படைத்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேஷமூர்த்தி தெரிவித்தார். 

மாத்தறை, திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே விடுவிக்கப்பட்டதாகவும் அவர்  கூறினார்.

குறித்த மீனவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும்  நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இந்த நிலையில்,  குறித்த மீனவர்களின் பயண ஒழுங்குகளை மேற்கொண்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

மேலும்,  இவர்களின் படகுகளை கடல் மார்க்கமாக அவர்களின் இடங்களுக்கு  அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் என்.கணேஷமூர்த்தி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .