2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 351 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Super User   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி  மாவட்டத்தில்  பட்டதாரி  கடமையாற்றிய 351 பேருக்கு நிரந்தர நியமனங்கள்; நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் செல்லமுத்து  சிறிநிவாசன் தலைமையில் கிளிநொச்சி  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் இந்நியமனக் கடிதங்களை வழங்கினார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் கால்நடை, விவசாயம், பொருளாதார அபிவிருத்தி சார்ந்த திணைக்களங்களிலும் தற்காலிகமாக பணியாற்றி வந்த பட்டதாரிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில்; மாவட்ட  திட்டமிடல்  பணிப்பார் சரவணபவன் மோகனபவன்,  மாவட்ட  செயலக  உதவித்திட்டமிடல்  பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன், கமநல சேவைகள் ஆணையாளர் எஸ்.தயாறூபன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .