2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விவசாயிகளிடமிருந்து 70 ரூபாவுக்கு உருளைக்கிழங்கு கொள்வனவு

Super User   / 2014 ஜனவரி 19 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகளை கிலோ 70 ரூபாப்படி கொள்முதல் செய்யும் நடவடிக்கையினை லங்கா சதொச நிறுவனம் அடுத்த வாரமளவில் ஆரம்பித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் 72 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட உருளைக்கிழங்கு தற்போது அறுவடை நிலையினை அடைந்துள்ளது.

இதனையடுத்து உருளைக் கிழங்குகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுதல் சம்பந்தமாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், கமநல திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன், லங்கா சதோச நிறுவன அதிகாரிகள் மற்றும் உருளைக்கிழங்கு செய்கையாளர் சங்கத்தினர் இடையிலான கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலினைத் தொடர்ந்து லங்கா சதோச நிறுவனம் யாழ். மாவட்டத்தில் விளைவிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை 70 ரூபா விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாகவும் அதனை யாழ்ப்பாணத்திலேயே சந்தைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொள்முதல் நடவடிக்கைகள் அடுத்த வாரமளவில் விவசாயிகளின் விவசாய நிலங்களில் ஆரம்பமாகவுள்ளதுடன், நேற்று (18) உருளைக்கிழங்கு பயிரிடப்பட்ட இடங்களுக்குச் சென்ற சதொச நிறுவன அதிகாரிகள் உருளைக்கிழங்குகளின் மாதிரிகளைப் பெற்றுச் சென்றனர்.

யாழ்.மாவட்டத்தில் உடுவில், உரும்பிராய், புத்தூர் உள்ளிட்ட இடங்களில் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கை அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .