2025 ஜூன் 21, சனிக்கிழமை

தெல்லிப்பழையில் 8 பேர் டெங்கால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 8 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரசேவைகள் பணிமனையின் தெல்லிப்பழை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வசாவிளர் குட்டியபுலம் பகுதியில் கடந்த வாரம் இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பகுதயில் உடனடியாக புகை விசிறப்பட்டுள்ளதுடன் நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 6 பேர் உறுதிப்படுத்தப்பட்டபோதிலும், இருவர் இன்னமும் சரிவர உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .