2025 ஜூன் 28, சனிக்கிழமை

82 புவண் நகை, பணம் கொள்ளை

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புத்தாண்டு தினத்தன்று மட்டும் 82 பவுண் நகைகள் மற்றும் 1,07,000 ரூபா பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டமை  கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே.எதிரிசிங்க வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

மிருசுவில் வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் 35 பவுண் நகைகளும் 1,00,000 ரூபா பணமும், மீசாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் 40 பவுண் நகைகளும், கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் 7 பவுண் நகை மற்றும் 7,000 ரூபா பணம் என்பன புத்தாண்டு தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளினை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .