2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

1,083 பட்டதாரிகளுக்கு வடக்கில் நிரந்தர நியமனம்

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


வட மாகாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய 1,083 பட்டதாரிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் ஆகியோர் இந்த நியமனக் கடிதங்களை வழங்கினர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வட மாகாணத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் கால்நடை, விவசாயம், பொருளாதார அபிவிருத்தி சார்ந்த திணைக்களங்களிலும் தற்காலிகமாக பணியாற்றி வந்த  பட்டதாரிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .