2025 ஜூன் 25, புதன்கிழமை

126 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா

யாழ்.பளை வீமன்காமம் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 126 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,  அப்பகுதி கிராம அலுவலத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (5) வழங்கப்பட்டன.

முன்பள்ளி மற்றும் தரம் ஒன்று முதல் தரம் 5 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றுவரும் வறிய மாணவர்களுக்கே மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மானிப்பாய்  நகர லயன்ஸ் கழகம் கிராம அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கான நிதியை சுவிஸ் நாட்டில் இருந்து வந்த லயன்ஸ் எஸ்.மகேந்திரன் மற்றும் அவருடைய பாரியார் திருமதி ம.விஜயகுமாரி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

பளை, வீமன்காம கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் லயன்ஸ் எஸ்.சுந்தரேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற உபகரணங்கள் கையளிப்பில், மானிப்பாய்  நகர லயன்ஸ் பிராந்திய ஆலோசகர் லயன்ஸ் வைத்திய கலாநிதி வி.தியாகராசா, மாகாண பிரதி செயலாளர் லயன்ஸ் ஆர்.ஜெயபாலன், மானிப்பாய் நகர லயன்ஸ் கழகத்தலைவர் எஸ்.நாகையா, செயலாளர் லயன்ஸ் எல்.ஜெயராஜ், திருமதி மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கொப்பிகள், பேனை, பென்சில்கள் மற்றும் கொம்பஸ் உபகரண பெட்டிகள் என்பன மேற்படி மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டடுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .