2025 ஜூன் 26, வியாழக்கிழமை

14 பேருக்கு கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை என பொலிஸில் முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.கொடிகாமம் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நாட்கூலிப் பணியாளர்கள் 14 பேருக்கு இரண்டு மாதக்கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என நாட்கூலிப் பணியாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (29) தெரிவித்தனர்.

மேற்படி தினக்கூலியாளர்களில் 1300 ரூபா மற்றும் 1000 ரூபாய்களை தினக்கூலியாக பெறும் பணியாளர்களுக்கே இவ்வாறு 2 மாதங்களுக்கான கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூலிகள் வழங்கப்படாமல் வெளி பிரதேச கூலியாளர்களும் இருப்பதாகவும் இந்த 14 பேருக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் சிறிது காலம் கழித்தே கூலிகள் வழங்க முடியும் என நிர்வாகம தெரிவித்துவிட்டதாகவும் அம் முறைப்பாட்டாளர் விசாரணையின் போது பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இது தொடர்பாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யும்படி முறைப்பாட்டாளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வடக்கு ரயில்வே அமைக்கும் பணிகள் இந்தி அரசின் நிதியுதவியுடன் மிக விரைவாக நடைபெற்று வருகின்றது. அத்துடன் பளை வரையிலும் பரீட்சார்த்த ரயில் ஓட்டம் நடைபெற்றிருப்பதுடன், எதிர்வரும் தமிழ் சித்திரைப் புத்தாண்டுக்குள் யாழ்ப்பாணம் வரையிலும் ரயில் சேவை இடம்பெறுமென ரயில் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .