2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

18 இலட்சம் ரூபா மோசடி :பெண் கைது

Kanagaraj   / 2013 மார்ச் 21 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவரை யாழ். பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் யாழ். நகரப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து யாழில் உள்ளவர்களிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கோரி பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் 6 இலட்சத்தில் 67 ஆயிரம் ரூபா பணத்தினை கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணை விசாரணையின் பின்னர் யாழ். நீதிமன்றில் நாளை ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .