2025 ஜூன் 25, புதன்கிழமை

20 இந்திய மீனவர் விடுதலை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 13 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணத்தினைச் சேர்ந்த 20 மீனவர்கள் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய மல்லாகம் நீதிமன்ற  நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் இன்று (13) விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, கோட்டைப்பட்டிணம், ஜனதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 8 படகுகளில் வந்த 30 மீனவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான்; உத்தரவிட்டார்.

5 படகுகளில் வந்த 20 மீனவர்களும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, இவர்கள் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் வழக்கு இன்று (13) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய விடுவிக்கப்பட்டதாகவும், அத்துடன் அவர்கள் வந்த 5 படகுகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் நீதவான் தெரிவித்தானர்.

அத்துடன், யாழ். அனலைதீவுக் கடலில் வைத்து கடற்படையினரால் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களின் வழக்கும் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி...

இந்திய மீனவர்கள் 50 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .