2025 ஜூன் 18, புதன்கிழமை

20ஆவது ஆண்டு நினைவு கூட்டமும் நூல் வெளியீடும்

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா


இலங்கை பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடித் தலைவர் நா.சண்முகதாஸனின்  20வது ஆண்டு நினைவு தின கூட்டமும் 'ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகளும்' நூல் வெளியீடும் யாழில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாக்சீச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்.டானியல் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாக்சீச லெனினிச கட்சியின் அங்கத்தவர் இ.தவராஜா தலைமையில், நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில், இலங்கை பொதுவுடைமை கட்சியின் முன்னாள் உறுப்பினர்; எஸ்.ஜி.கணேசவேல்; மற்றும் 'தாயகம்' பத்திரிகையின் ஆசிரியர் க.தணிகாசலம் ஆகியோர் நினைவுப் பேருரையாற்றினர்
இந்நிகழ்வில், மாக்சீச லெனினிச கட்சியின் உறுப்பினர்கள்  மற்றும் ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .