Super User / 2010 நவம்பர் 05 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ்ப்பாணம் பிரதேச செயலக சமுர்தி மகா சங்கத்தின் சமூக அபிவிருத்தி மன்றின் மூலம் வசதி குறைந்த மாணவர்களுக்கான கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழிலகள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா யாழ்ப்பாணம் கல்வி வலயப் பணிப்பாளர் அருலேஸ்வரி வேதநாயகம் சமுர்த்தி உதவி ஆனையாளர் தி .மகேஸ்வரக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .