2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை என முறைப்பாடு

Super User   / 2011 ஜனவரி 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி, தாஸ்)

யாழ். உரும்பிராயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று சனிக்கிழமை இரவு 10.மணி முதல் காணவில்லை என யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவகுல வீதி மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான எஸ். கோபிநாத் என்ற இளம் குடும்பஸ்தரே காணாமல் போனவராவார். இவர் ஆட்டோ சாரதி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.கோபிநாத் காணாமல் போனமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X