2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்.பருத்தித்துறை வீதி விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 31 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்)

யாழ்.; பருத்தித்துறை வீதியிலுள்ள நாவற்காடு எனும் பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபரின்  மோட்டார் சைக்கிள் வாகனமொன்றுடன்  மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இராஜதுரை ரஜீவன் (வயது 22) என்பவரே  இந்த விபத்தில் பலியானவர் ஆவர்.

இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரான இராஜதுரை பஜிந்தன் (வயது 20) என்பவர் இவ்விபத்தில்  படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில்  அச்சுவேலிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X