Super User / 2011 மே 21 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்திய மீனவர்களின் அத்துமீறி இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பது இனிமேல் நடைபெறமாட்டாது என யாழ். இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் உறுதியழித்ததாக வட மாகாண கடற்றொழிலாளர் சமாச தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் பிரச்சனை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடலுக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடமாட்டார்கள் என்ற தகவலைப் புதுடில்லி தமக்கு வழங்கியிருப்பதாக வட மாகாண மீனவ சங்கப் பிரதிநிதிகள் நேற்றைய சந்திப்பில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களினால் வடகடல் மீனவர்களது செத்துக்கள் அழிக்கப்பட்டதற்கு நஷ்;டஈடு தொடர்பாக இந்திய அரசாங்கத்துடனும் இலங்கை அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூடிய விரைவில் நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
32 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago