2025 மே 17, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக நுண்கலை பீட மாணவர்களின் ஓவியக்கண்காட்சி

Super User   / 2011 டிசெம்பர் 21 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக நுண்கலை பீட சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களின் ஓவியக்கண்காட்சியை யாழ் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் சித்திரமும் வடிவமைப்பும் அலகின் நான்காம் வருட மாணவர்களின் கற்ககையின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகக் கலையகத்தில் உருவாக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் அமையாமல் இளம் படைப்பாளர்களின அணுகுமுறையையும் அடையாளத்தையும பிரதி பலிப்பதனால் கலையுலக பிரவேசத்தின் முதற்படி என்ற நிலையில் இக்கண்காட்சியை முகிழ் 2011 என மாணவர்கள் பெயரிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் சித்திரமும் வடிவமைப்பும் துறை இணைப்பாளர் ரி.சனாதனன், பேராசிரியர் என்.சண்முகதாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்ப நிகழ்வில்; கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியானது 24ஆம் திகதி வரை காலை 10 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .