2025 ஜூன் 21, சனிக்கிழமை

பொதுமக்களின் சொத்துக்களை இராணுவம் ஆக்கிரமிக்காது: யாழ். கட்டளைத் தளபதி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொதுமக்களின் சொத்துக்களை இராணுவம் ஆக்கிரமிக்கவோ சுவீகரிக்கவோ மாட்டாது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளிடம் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்இ மத்திய கிழக்குஇ வட அமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி உட்பட ஐ.நா. அதிகாரிகள், மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தனர்.

'நாட்டின் மூன்றிலிரு பகுதி கரையோரப்பகுதி உட்பட நாட்டின் மூன்றிலொரு பகுதியை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்கு பெரும் எண்ணிக்கையானனோர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். யுத்தம் முடிந்துவிட்டது என்பதற்காக, பயங்கரவாதத்திற்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடிய சிப்பாய்களை வீட்டுக்கு அனுப்பிவிட முடியாது. அவர்கள் நாட்டிற்குள் வைத்திருக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணமானது இலங்கையின் ஒரு பகுதியாகும். எனினும் நாட்டின் ஏனைய சில மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்திலுள்ள துருப்புக்களின் எண்ணிக்கை குறைவாகும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கையை மிகைப்படுத்துகின்றன' என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பற்றிய தகவல்கள், யுத்தம் மற்றும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட உயிர் சொத்து அழிவுகள் குறித்து மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க விளக்கியதாக, பாதுகாப்புப் படைகளின் யாழ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் பயங்கரவாதிகளுடனேயே போரிட்டோம். தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் அனுபவித்த துன்பங்களை நாம் கண்டோம். பயங்கரவாதத்தை வெற்றிரகமாக தோற்கடித்த பின்னர் அடிப்படைத் தேவைகளை நாம் இனம் கண்டதுடன் நலன்புரித் திட்டங்கள் பலவற்றை இராணுவம் ஆரம்பித்தது.

எல்.ரி.ரி.ஈ, முன்னாள் போராளிகளின் ஜீவனோபாய செயற்பாடுகள், ஆதரவற்ற குடும்பங்களுக்கான வீடமைப்பு, குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்கள் ஆகியன அவற்றுள் சிலவாகும்' என அவர்கூறினார்.

'சிங்களவர்களும் தமிழர்களும் பல தலைமுறைகளாக சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். ஆனால், கர்வம்கொண்ட உயர்மட்ட தமிழர்கள் சிலர் தமிழர்களுக்கான தனிநாட்டை பெறுவதற்கு தமிழ் இளைஞர்களை தூண்டினர். பெரும்பாலான தமிழ் மக்கள் இதை விரும்பவில்லை.

ஆனால் எல்.ரி.ரி.ஈ.யினரின் அச்சுறுத்தல்களால் சரணடைவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை' எனவும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .