2025 ஜூன் 21, சனிக்கிழமை

பற்றிகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள  எயாரெல் கோபுரத்தில் இருந்து 20 பற்றிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் 20 பற்றிகளும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டன.

எயாரெல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த சுமார் 20,000 ரூபா பெறுமதியான பற்றிகள் கடந்த வியாழக்கிழமை  திருட்டுப்போயுள்ளதாக நிறுவன முகாமையாளர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் திருடப்பட்டதாகக் கூறப்படும் பற்றிகளுடன் சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .