2025 ஜூன் 21, சனிக்கிழமை

தீவகம் தெற்கு கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகம் தாமதிக்கப்படுவதாக முறைப்பாடு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தீவகம் தெற்கு கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் தாமதிக்கப்படுவதாக தீவக மீனவர்கள் கடற்தொழிலாளர் சமாச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தீவக தெற்கு சமாச தலைவர் ச.ரங்கநாயகம் இன்று புதன்கிழமை கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக, யாழ். கடற்றொழிலாளர் நீரியல் வள உதவிப் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடப்பட்டு 2012 மாசி முதல் சகல மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தீவக பகுதி மீனவர்களுக்கு வழங்கப்படாமைக்கான காரணம் குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர் சுட்டிக்காட்டினர்.

கடல் வள்ளம், படகு, எஞ்சின் என்பவற்றை பதிய வருவதாக நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். பல நாட்கள் ஆகியும் படகுகளைப் பதிவதற்கு வரவில்லை. பின்னர் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளரிடம் கேட்டபோது நடமாடும் சேவையில் பதியுமாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாட்கள் ஆகியும் வரவில்லை. மீண்டும் சந்தித்தபோது 2 நாட்களில் பதிவு மேற்கொள்ளுமாறும் கூறினார். தீவக மக்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். முதன் முதலாக வேலணை பிரதேச சபை தலைவர் சி.சிவராசாவிடம் முறையிடப்பட்டது.

எரிபொருள் கிடைக்குமென நாடினோம். படிவங்களை நிரப்பி கொடுக்கப்பட்ட பின்னர், வேலணை, துறையூர் மீனவர்கள் 48 படிவங்களை நிரப்பி கடற்றொழில் பரிசோதகரிடம் 11.04.2012 கையிளிக்கப்பட்டது. எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் நிரப்புவதற்கு 25 கோடி ரூபா செலவிடுவதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் தீவக பகுதி மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை. எரிபொருள் வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் பரிசோதகர் வி.ரமேஷ் கண்ணாவிடம் வினவியபோது அவர் தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்,

தீவகப் பகுதி மீனவர்கள் தமது படகுகளின் பதிவுகளை தாமதமாக மேற்கொண்ட காரணத்தினால் எரிபொருள் வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகின்றது. ஆரம்பப் பதிவுகள் 51பேர் பதியப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு தலைமைக் காரியாலத்திற்கு அனுப்பப்பட்டது.

தலைமைக் காரியாலயத்தில் உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்ற சந்தர்;ப்பத்தில் மீனவர்களின் விண்ணப்பப் படிவங்கள் பரிசீலனை மேற்கொள்வதற்கு தாமதமாக இருக்கின்றது.

இவர்களுக்கான எரிபொருள் விநியோக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. செப்டெம்பர் மாதத்திற்கான எரிபொருள் விநியோகம் ஒக்டோபர் மாதத்திற்குள் வழங்கப்படவுள்ளதாகவும், யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .