2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான அலகுக்காக குவைத் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கபட்ட மூன்று மாடி கட்டிட திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கட்டிடத்தினை, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உத்தியோகப்பூர்வமாக திறந்துவைத்தார்.

இக்கட்டிடம் 54 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான இணைமருத்துவ விஞ்ஞான அலகு பயிற்சி நெறி இதுவரை காலமும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்தமித்திர ஏக்கநாயக்க, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் ஜெயந்த நவரட்ண உட்பட யாழ். பல்கலைக்கழ மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் போராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .