2025 ஜூன் 21, சனிக்கிழமை

சட்டவிரோத மதுபான, போதைப்பொருள், சிகரெட் விற்பனையாளர்களிடமிருந்து தண்டம் அறவீடு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

சட்டவிரோதமாக மதுபான வகைகள்,  போதைப்பொருள் மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 32 பேரிடம் 63,000 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலகப் பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் இன்று தெரிவித்தார்.

மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இவர்கள் மீதான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், 32 பேரும் யாழ். மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவர்களுக்கு இத்தண்டம் விதிக்கப்பட்டதாகவும் மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலகப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .