2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் ஒருவாரம் டெங்கொழிப்பு வாரமாக பிரகடனம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் மழை காலம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அடுத்துவரும் ஒரு வார காலத்தை டெங்கொழிப்பு வாரமாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. இந்நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை ஒரு வார காலம் டெங்கொழிப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான சுற்றுநிரூபங்கள் யாழ். மாவட்ட  பிராந்திய சுகாதார சேவைகள்  திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனினால் யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பணி;மனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரிகளின் எல்லைகளும் 07 வலயங்களாக பிரிக்கப்பட்டு குறிப்பி;ட்ட நாட்களில் அப்பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச்சென்று டெங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .