2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடக்கில் தென்னிலங்கை மீனவர் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி: மாவை எம்.பி குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


எமது மீனவர்கள் தொழில் செய்ய தடைவிதிக்கப்பட்ட இடத்தில் தென்னிலங்கை மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் எமது மீனவர்கள் பாதிகப்படுவதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு நீரியல் வளத்துறை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் மீனவர்கள் பருத்தித்துறை தொடக்கம் சுண்டிக்குளம் வரையான பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி கடல் அட்டை, சங்கு மற்றும் இறால் ஆகியவற்றைப் பிடித்து வருகின்றனர்.

இதனால் எமது மீன்வர்களின் தொழில் பாதிக்கப்படுவதோடு நீரியல் வளத்துறை அமைச்சின் அனுமதியுடனேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்வை எம்.பி.யின் கருத்துக்கு பதிலளித்த யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரி, 'பருவகாலத்தில் இவ்வாறான தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நீரியல் வளத்துறை அமைச்சின் அனுமதியுடனேயே அவர்கள் தொழில் நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் பல்வேறு எதிர்ப்புக்கள் காரணமாக தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .