2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அரசியல் தீர்வை வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை: சிறிதரன் எம்.பி

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற சிந்தனை அரசாங்கத்திடம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வரலாற்றுப் பூமியில் ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிறிய ஒரு அலகைக்கொண்ட ஆட்சி முறையைக் கூட நடத்த முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் பயங்காரவாத செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனை, ஆசியாவின் அச்சரியம் என்று கூறிக்கொள்ளும் அரசாங்கம், தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற சிந்தனை எண்ணத்தில கூட இல்லை.  அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பிரிவடைந்திருந்தாலும் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு போராடுவோம்" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவாஜிலிங்கம்,

"வன்னி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் மரணம் தொடர்பாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும். குடாநாட்டில் தொடர்ந்தும் காட்டாட்சியை நடத்த அனுமதிக்க முடியாது. சிவில் ஆட்சியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் இன்று தொடர்ச்சியாக படை தரப்பினரால் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரு கிராம அலுவலர் பிரிவில் ஒரு இராணுவ முகாம் என்று ரீதியில் அரசின் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருதோடு பௌத்த மயமாக்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் நிலைபாட்டில் அரசாங்கம் இல்லை. இதன் வெளிப்பாடாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் கருத்து அமைந்துள்ளது" என்றார்.

  Comments - 0

  • Sumathy M Thursday, 18 October 2012 02:56 AM

    காட்டாட்சி நடக்குது, குடியேற்றம் நடக்குது, புத்த கோவில் கட்டப்படுகுது, தீர்வு எதையும் பெற ஏலாமல் இருக்கு... உப்பிடிஎண்டால் நீங்கள் எதுக்கு இருக்கிறியள்? மக்கள் உங்களை நம்பிஎல்லோ அனுப்பினவை ராசாக்கள். கொஞ்சம் யோசியுங்கோ, ஏலாட்டி விட்டிட்டு போங்கோ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X