2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலாவி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

மூவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதலினால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .