2025 ஜூன் 18, புதன்கிழமை

இடமாற்றத்தினை ஏற்றுக்கொள்ளாது சட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமாகுமாறு கோரிக்கை

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மரணமடைந்த பெண் ஆசிரியர் ஒருவரின் பெயரை அண்மையில் வழங்கிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலிலும் பதிலீட்டாசிரியர் பட்டியலில் இணைத்து வெளியிட்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடமாற்ற பட்டியலில் ஓர் ஆசிரியரின் பெயரை இரண்டு, மூன்று இடங்களில் பட்டியலிடப்பட்டிருப்பது மிகப் பெரும் தவறு மட்டுமல்லாது, ஊதியம் வழங்கும் முறையிலும் குறைபாடுகள் இருப்பதாகவும் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இப்பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக பலரிடம் தெரிவித்த நிலையிலும், எவரும் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஒரு மாநிலக் கல்வி பணிப்பாளர் செய்த வேலையை பல நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து செய்ய முடியவில்லை. தவறு இருக்கின்றது என்பதனை எவரும் கண்டறியவில்லை.

வடமாகாண கல்விப் பணிப்பாளர்கள் தனித்து நின்று செய்த காரியத்தினை தவறு என்றவர்கள் இன்று குட்டையை குழப்பி குட்டிச் சுவராக்கியுள்ளார்கள். ஆசிரியர் இடமாற்றம் என்பது வடமாகாணத்தில் அரச சுற்று நிருபங்களுக்கும் நியதிகளுக்கும் அப்பாற்பட்டு அடாவடித்தனமாக நடைபெறுவதனை அப்பட்டமாக இது காட்டுகின்றது.

புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்குங்கள் என பல தடவைகள் எடுத்துக் கூறியும், தாங்கள் நினைத்தவற்றைச் செய்யும் அதிகாரிகளுக்கு இனிமேலும் புரியவில்லை என்றால் இவர்களுக்கு இறைவன் வழங்கும் தண்டனை மிகவும் பாரதூரமானதாக இருக்கப்போகின்றது.

இடமாற்றப் பட்டியலில் பெயர்கள் குறிப்பிடப்பட்ட ஆசிரியர்கள் எவரும் இடமாற்றத்தினை ஏற்றுக்கொள்ளாது சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். ஒரு பாடசாலையில் உள்ள பிள்ளைகளின் கல்வியை அழித்து இன்னொரு பாடசாலை ஆசிரியரை கட்டாயப்படுத்தி அனுப்ப வேண்டாமென்றும், எந்த சுற்று நிரூபத்திலும் இல்லை. இதனை இதுவரை காலமும் பொறுத்திருந்த நாம் சட்ட நடைமுறைகளுக்கூடாக தட்டிக் கேட்டும் தருணம் இது. யாழ். குடாநாட்டு பாடசாலைகளின் கல்வி அழிந்துவிடும் அளவிற்கு பாரதூரமானது என்பதனால் அனைவரின் ஒத்துழைப்பையும் தருமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .