2025 ஜூன் 18, புதன்கிழமை

திவிநெகுமவின் கீழ் 'மண் குடுவைகள்'

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.நவரட்னராசா

யாழில், திவிநெகும பயனாளிகளுக்கு விதைகளையிட்டு பயிர் செய்கை பண்ணுவதற்கு வசதியாக மண் குடுவைகள் அறிமுகம் செய்யப்பட்டுளளது.

திவிநெகும திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் உள்ள  அனைத்தக் குடும்பங்களுக்கும் திவிநெகும திட்டத்தின் கீழ்; கிராம அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி அலுவலர்களினாலும் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உரிய காணி இல்லையெனக் பலகுடும்பங்கள் கூறியதுடன் பயிர்களை செய்யாமலும் விதைகளை போடாமலும் கைவிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும்; விதைகளை நாட்டக் கூடிய வகையில் மண்ணிலான குடுவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த குடுவைகள் மூலம் சிறியளவிலான விதைகளை அதனுள் ஊன்றி பயிர்களை செய்கை பண்ணமுடியும் என் யாழ்.மாவட்ட திட்;டமிடற் கிளையின் அலுவலர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .