2025 ஜூன் 18, புதன்கிழமை

பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


ஆயிரம் பாடசாலை ஆபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமயில் நடைபெற்ற இந்  நிகழ்வில் பிரதம அதீதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டார்.

இதில் வடமாகாணத்தில் 1000 ஆயிரம் பாடசாலை இளநிலை பாடசாலை ஆபிவிருத்தி திட்டத்தில் 90 பாடசாலைகளும் 5000 ஆயிரம் அரம்பப் பாடசாலைகளில் 333 பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த பாடசாலைகளில் முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்ட 12 பாடசாலைகளுக்கு மல்டி மீடியா உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுனரின் செயலாளர்
இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் விக்னேஸ்வரன், மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராசா, மேலதிக கல்விப் பணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .